மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவுக்கு எதிராக பில்லி, சூனியம் வைத்த சந்தேகத்தின்பேரில் அந்நாட்டின் பெண் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் பாத்திமா ஷம்னாஸ் மாலைதீவு ஜனாதிபதிக்கு எதிராக பில்லி, சூனியம் வைத்ததாக சந்தேகத்தின் பேரில் பாத்திமா வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தினர்.
சோதனையில், சூனியம் தொடர்பான பல பொருட்களை பொலிஸார் கைப்பற்றினர். இதனையடுத்து பாத்திமா ஷம்னாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாலைதீவில், பண்டிதா அல்லது சிஹ_ரு என அழைக்கப்படும் பில்லி, சூனியம் வைப்பது கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது.