மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க மத்திய அரசு திட்டம்!

கொரோனா தொற்று பரவல் குறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க  திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”156 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் அடிப்படையில் வழங்கப்பட்ட இ- சுற்றுலா விசாக்கள் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிதாக இ-சுற்றுலா விசாக்கள் பெற வெளிநாட்டு பயணிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் அமெரிக்கா ஜப்பான் நாடுகளுக்கு வழாங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்கான சுற்றுலா விசாக்களை மீண்டும் வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.