புத்தாண்டில் குடும்பத்தை பார்க்க சென்ற தந்தைக்கு நடந்த துயரம்

தமிழ் சிங்களப் புத்தாண்டைக் கொண்டாட மனைவி மற்றும் பிள்ளைகள் பார்க்க சென்ற நபர் ஒருவரின் சட்டைப் பையில் இருந்த 80,000 ரூபா பணம் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த தந்தை கும்புக் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பதுரலிய, பில்லவலக்கடை ஆற்றுக்கு அருகில் வசிக்கும் களுஆராச்சி சரச்சந்திர என்ற 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், நவகமுவ, கீழ் பொமிரிய பிரதேசத்தில் உள்ள கல் ஆலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். கல் ஆலை உரிமையாளர் சம்பளமாக வழங்கிய 35,000 ரூபாவும், தான்  சேர்த்து வைத்திருந்த பணத்தையும் சேர்த்து 80,000 ரூபாவுடன் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தனது கிராமத்திற்கு அதிகாலையில் சென்றுள்ளார்.

அவர் அணிந்திருந்த மேல் சட்டைப் பையில் பணம் வைக்கப்பட்டிருந்ததாகவும், கிராண்ட்பாஸ் பகுதியில் பணம் இல்லாததைக் கண்டு பதற்றமடைந்து தேடியும் பலனளிக்காத நிலையில், அவர் வீட்டுக்குச் செல்லாமல் கல் ஆலைக்கு திரும்பியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் நேற்று முன்தினம் இரவு கல் ஆலைக்கு அருகில் உள்ள வழமையான தங்கும் அறையில் தங்கியிருந்ததாகவும், நேற்று காலை நண்பர் ஒருவர் அவரைத் தேடி வந்த போது, ​​அவர் தங்கும் அறையில் இல்லை எனவும், மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.