பின்னணி பாடகர் மாணிக்க விநாயகர் காலமானார்

பிரபல பின்னணி பாடகர்  மாணிக்க விநாயகர் 78 வயதில் உடல்நிலைக் குறைவால் காலமானார். அண்மையில்  இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிசை செய்திருந்த நிலையில் டிசம்பர் 26 மாலை காலமானார். இவர் 800 க்கு மேல் பாடல்களை பாடியுள்ளார். திமிரு, திருட திருடி ,சந்சதோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மயிலாடித்துறையை சேர்ந்த இவர் 1948 பிறந்தார்.இளம் வயது முதல் நன்றாக படக்கூடியவர். இவர் விக்ரம் நடித்ததில் படத்தில் வித்தியாசகர் இசையமைப்பில் 'கண்ணுக்குல கெழுத்தி' பாடல் மூலம் பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் பாடல்களை  பாடியுள்ளார். ஏராளமான இசை கச்சேரிகளிலும், பாடல் தொடர்பான நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். எப்போதும் சிரித்த முகம் ,நெற்றியில் திருநீறு , குங்குமம்  என சினிமா உலகில் வலம் வந்தார். தனது கணீர் குரலால் ரசிகர்களை ஈர்த்த உங்களது மறைவு  ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது உள்ளது.