பிரபல இந்திய நடிகர் மோகன்லால் இன்று முற்பகல் இலங்கை பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.
இந்திய நடிகர் மோகன்லால் விஸ்வநாதன் மற்றும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் படப்பிடிப்பிற்காக கடந்த 15 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தனர்.
'பேட்ரியட்' எனும் திரைப்படத்தின் மூன்று நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக அவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்றையதினம் பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றவரும் நிலையில் நடிகர் மோகன்லால் விஸ்வநாதன் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி அவரை வரவேற்றதுடன் நடிகர் மோகன்லால் பார்வையாளர் கலரியிலிருந்து பாராளுமன்ற அமர்வை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.