பாகிஸ்தான் பொலிஸ் நிலையத்தில் வெடிப்புச்சம்பவம் - 12 பேர் பலி!

பாகிஸ்தான் பொலிஸ் நிலையமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆப்கானிஸ்தானுக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தின் காபால் நகரில் திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்போது 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.