ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஆபத்து! கொழும்பில் வெடித்த போராட்டம்



ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் தொழில் திணைக்களத்திற்கு முன்பாக, இலங்கை தொழிற்சங்களினால் இன்று(11.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

EPF கொள்கை மற்றும் தொழிலாளர் சட்டதிருத்தங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து தொழிற்சங்களினால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவு வழங்கி மக்களின் EPF மற்றும் ETF பணத்தினையும் அதன் நன்மைகளையும் கிடைக்கவிடாமல் செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அரசாங்கம் மக்களை நசுக்கி பெரும் அநியாயம் செய்வதாகவும் கூறுகின்றனர்.