எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன் தேர்தல்! முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்


தேர்தல் தொடர்பான தகவலொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

அதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாரஹேன்பிட்டி அபயாராமவில் இன்றைய தினம் (27.03.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன் எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்கு தமது அணி தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.