கனடாவில் பயங்கரம்! - நள்ளிரவில் நடு வீதியில் சிறுமிகளின் வெறியாட்டம் - முதியவர் கொடூரக் கொலை


கனடாவின் ரொரன்றோவில்,  நபர் ஒருவரை எட்டு சிறுமிகள் சேர்ந்து கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, ரொறன்ரோவில், யார்க் பல்கலை பகுதியில், 59 வயதுடைய முதியவர் ஒருவரை சிறுமிகள் சிலர் தாக்குவதாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக காவல்துறைியனர் சென்றபோது முதியவர் படுகாயமடைந்த நிலையில் கிடந்துள்ளார். இந்நிலையில், அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.  இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது, அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் கூறிய தகவலைத் தொடர்ந்து அந்த நபரைத் தாக்கியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த விசாரணையின் போது அதிர்ச்சியளிக்கும் விடயம் வெளியாகியுள்ளது. இந்த கொடூரச் செயலைச் செய்தவர்கள் எட்டு சிறுமிகள் எனவும், அவர்களுக்கு 13 முதல் 16 வயது தான் என்பதும் தெரியவந்துள்ளது.

அவர்களைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து பல ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகத்தின் மூலம் ஒன்று கூடல்

சிறுமிகள், அந்த நபரிடமிருந்த மதுபான போத்தல் ஒன்றைப் பறிக்க முயன்றபோது அவர்களுக்குள் சண்டை ஆரம்பித்து வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது கொலையில் முடிந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொலைச்சம்மபவத்தில் ஈடுபட்டிருந்த சிறுவர்கள் அனைவரும் கனடாவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சமூக ஊடகம் ஒன்றின் வாயிலாக சந்தித்து ஓரிடத்தில் ஒன்று கூடி அவர்கள் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.