யாழ்.சிறையில் இருந்து எட்டு பேர் விடுதலை


 

யாழ். சிறைச்சாலையில் இருந்து 08கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் குறித்த 08 கைதிகளும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 7 ஆண் கைதிகளுக்கும் ஒரு பெண் கைதியுமாக 08 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.