திருகோணமலை கடல் பகுதியில் 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று (18) மாலை சுமார் 4:06 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிறுவப்பட்ட நான்கு நிலநடுக்க வரைபடங்களாலும் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்க வரைபடங்கள் மகாகனதர, ஹக்மான, பல்லேகெலே மற்றும் புத்தங்கல பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.