அடுத்த 50 ஆண்டுகளில் டுபாய் எப்படி இருக்கும்? - திகைப்பூட்டும் செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள்


அடுத்த 50 ஆண்டுகளில் டுபாய் எவ்வாறு இருக்கும்? என்ற கற்பனைக்கு விடையளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் பரவி வருகின்றன.
 
டுபாய் நகரம் உலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. உலக அளவில் நவீன தொழில்நுட்பங்களும், எதிர்கால பயன்பாட்டு சாதனங்களும் அறிமுகம் செய்யப்படும் முக்கிய மையமாக டுபாய் இருந்து வருகிறது.
 
குறிப்பாக இங்குள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் நடைமுறைகள் உலக அளவில் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளன.

இவ்வாறு நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் டுபாய் நகரம் அடுத்த 50 ஆண்டுகளில் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு மனிதர்கள் தங்கள் கற்பனையாற்றலின் வரம்புக்குள் மட்டுமே சிந்தித்து பார்க்க முடிகிறது. ஆனால் அப்போது டுபாயின் கட்டமைப்பு எப்படி இருக்கும்? என்பதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படம் பிடித்து காட்டியுள்ளது.