உக்ரைனிய கடற்படையினருக்கு நீருக்கடியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ட்ரோன் பயிற்சி!

உக்ரைனிய கடற்படையினருக்கு நீருக்கடியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ட்ரோன் பயிற்சிகளை றோயல் கடற்படையினர் அளித்து வருகின்றனர்.இது ரஷ்ய துருப்புகளால் கடற்பகுதியில் நிரப்பப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அழிக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

பத்துக்கும் மேற்பட்ட உக்ரைனிய பணியாளர்கள் ஏற்கனவே தெற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு பயிற்சி குழாமில் மூன்று வார பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளனர்.கப்பல்களில் இருந்து தரவை எவ்வாறு இயக்குவது மற்றும் பகுப்பாய்வு செய்வது என்பதைக் கற்றுக்கொண்டனர்.சோனார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ட்ரோன்கள் கடற்பரப்புகளைத் தேடுகின்றன மற்றும் உக்ரைனிய கடற்படையால் தண்ணீரில் வெடிக்கும் அச்சுறுத்தல்களைக் கண்டறிய பயன்படுத்தப்படும்.குறிப்பாக மிகவும் முக்கியமான பகுதியான ஒடேசாவிற்கு அருகில் ட்ரோன்கள், கண்ணி வெடிகளை அழிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த கண்ணிவெடிகளைக் கண்டறிவதே எங்கள் முதன்மை பணியாகும். ஏனெனில் இது இராணுவத்திற்கு மட்டுமல்ல, சிவிலியன் கப்பல்களுக்கும், சிவிலியன் வர்த்தகத்திற்கும் மிகவும் முக்கியமானது.’ என கூறினார்.

நிலவரப்படி, கடற்கரையில் கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றுவதற்கு ஒரு தசாப்தம் ஆகலாம். ஆனால் இப்போதைக்கு, ட்ரோன்களை உடனடியாக இயக்கத் தொடங்கும் திறன்களுடன் உக்ரைனுக்குத் திரும்புவதில் கவனம் செலுத்தப்படுகிறது.