தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை கொண்டுள்ளவர், இயக்குனர் பாலா.இவர் கடந்த 2004ஆம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிராதானா எனும் மகன் உள்ளார்.பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும், கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்து வாழந்து வந்துள்ளனர்.இந்நிலையில், இன்று பாலா – முத்துமலர் இருவரும் சுமுகமாக விவாகரத்து பெற்று முழுமையாக பிரித்துவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.17 வருடங்கள் வாழ்ந்து வாழ்ந்து வந்த பாலா – முத்துமலர், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்கள்.இவருடைய விவாகரத்து தகவல் திரையுலகினர் மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.