இயக்குனர் ஆச்சார்யா ரவி மறைவு

ஷாஜகான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறியப்பட்ட ஆச்சார்யா ரவி மாரடைப்பால் காலமானார். சேது படத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த இவர் பிறகு விக்னேஷ் நடிப்பில் வெளியான ' ஆச்சார்யா' படத்தை இயக்கினார். இப்படத்தின் மூலம் ஆச்சார்யா ரவி என அறியப்பட்டார். இவர் அனைத்துக்கும் ஆசைப்படு , டம்மி பட்டாசு போன்ற படங்களை இயக்கியுள்ளார்.சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை  பெற்றுவந்தார். இந்நிலையில் மாரடைப்பால் இவரது உயிர் இன்று (டிசம்பர் 28) பிரிந்தது. இவரது மறைவுக்கு திரைஉலகினர் இரங்கல்  தெரிவித்து வருகின்றனர்.