உக்ரைனின் எதிர்ப்பை மீறி ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டது ரஷ்யா!

உக்ரைனின் எதிர்ப்பையும் கோபத்தையும் மீறி, ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது.ஐ.நா. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகளும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதத்திற்கும் தலைமை பதவியை வகிக்கின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமை பதவியை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவுள்ளது.உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மீதான பனிப்போருக்குப் பிறகு மேற்கு நாடுகளுடன் உறவுகள் மிகக் குறைந்த நிலையில் உள்ளன.

இந்நிலையில் ரஷ்யா தலைமைத்துவத்தை பொறுப்பேற்றமையானது சர்வதேச சமூகத்தின் முகத்தில் அறைந்தமைக்கு சமம் என உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் பதவியை துஷ்பிரயோகம் செய்வதற்கான முயற்சியை அனைவரும் ஒன்றிணைத்து முறியடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.இருப்பினும், சபையில் நிரந்தர உறுப்பினரான ரஷ்யாவை தலைமை பதவிக்கு வருவதை தடுக்க முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.