விரைவில் பதவியில் இருந்து நீக்கப்படும் தேசபந்து

பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை(Deshabandu Tennakoon) பதவி நீக்கம் செய்வதற்கான முன்மொழிவு ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். 

பதவி நீக்கம் 

இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

மேலும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குமாறு கோரி எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.