டெல்லியில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு!

டெல்லியில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு வழங்கப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், திரையரங்குகள், போன்றவை 50 சதவீத நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரவு நேர ஊரடங்கு தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.