தமிழகத்தில் கோவிட் கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கம்!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று (வியாழக்கிழமை) முதல் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இருப்பினும் திருமணம் மற்றும் இறப்பு ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்கும் நபர்களுக்கான கட்டுப்பாடுகள் மாத்திரம் அமுலில் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.இதன்படி நோய் தொற்று பரவலை கட்டுக்குள் வைக்க திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 500 பேருக்கு மிகாமல் நடத்த அனுமதிக்கப்படும் எனவும், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 250 பேருடன் நடத்த அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.அதேநேரம் பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.