ஸ்கொட்லந்து மருத்துவமனைகளில் உச்சத்தை தொட்ட கொவிட் நோயாளர்கள்!

ஸ்கொட்லந்து மருத்துவமனைகளில் கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த புதன்கிழமை சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் தொற்றுடன் 1,636பேர் மருத்துவமனையில் இருப்பதாக தரவுகள் காட்டுகின்றன.இது இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பதிவான 1,571 என்ற ஒமிக்ரோன் தொற்று உச்சத்தை விட அதிகமாகும்.2021ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி முதல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளனர்.மொத்தம் 1,672பேர் மருத்துவமனையில் இருந்தனர். ஜனவரி 2021ஆம் ஆண்டு மருத்துவமனைகளின் எண்ணிக்கை 2,053ஆக உயர்ந்தது.