இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட் தொற்று!

இந்தியாவில் புதன்கிழமை ஒரேநாளில் 7495 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 கோடியே 47 இலட்சத்து 65 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 42 இலட்சத்து 1 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இவர்களில் 84251 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் 434 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.