பூஜ்ஜியத்தை தொட்டுள்ள கோவிட் உயிரிழப்புக்கள்!

கொரோனா தொற்றானது கடந்த 2020 ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. 2020ம் ஆண்டின் இறுதியில் முதல் அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே சென்றது. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பரவத் தொடங்கிய கொரோனா தொற்றால் தினசரி உயிரிழப்பு 1000த்தை தாண்டி பதிவாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2020ம் ஆண்டில் மார்ச் மாதம் 1 உயிரழப்பு ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 19 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. மேலும் இதுவரை தொற்றால் 38,023 பேர் தமிழ்நாட்டில் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய பின்பு முதன்முறையாக உயிரிழப்பு பூஜ்ஜியத்தை தொட்டுள்ளது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.