தொடர்ந்து உயரும் கடல் மட்டம்.. தலைநகரை இடமாற்றம் செய்யும் தாய்லாந்து

 
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக், கடற்கரையை அண்மித்த தாழ்வான பகுதியில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கினால் அதிகம் பாதிக்கப்படுகிறது. நகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கிவிடுகிறது.


இது ஒருபுறமிருக்க, காலநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் அதிகரிப்பதால் தலைநகருக்கு கூடுதல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
 
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பாங்கொக் நகரின் தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

எனவே, நாட்டின் தலைநகரான பாங்கொக்கை இடமாற்றம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யலாம் என நாட்டின் காலநிலை மாற்ற அலுவலக சிரேஷ்ட அதிகாரி பவிச் கேசவவோங் தெரிவித்துள்ளார்.