தனது மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்திய சீனா!

சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி, கப்பலுக்கு ஃபுஜியான் என்று பெயரிட்டுள்ளது.சீனாவின் சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட போர்க்கப்பல் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஷாங்காய் நகரில் உள்ள சீனா ஸ்டேட் ஷிப் பில்டிங் கார்ப்பரேஷன் (சிஎஸ்எஸ்சி) கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுவந்தது.இந்த நிலையின் கப்பல் கட்டும் பணிகள் முழுமையடைந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) கப்பல் கடலில் இறக்கப்பட்டது.ஃபுஜியான் சீனாவின் முழு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் இதுவாகும். கப்பல் 80,000 டன்களுக்கும் அதிகமான இடப்பெயர்ச்சியைக் கொண்டுள்ளது. புஜியன் இப்போது மூரிங் மற்றும் கடல் சோதனைகளைத் தொடங்கும்.ஃபுஜியான், மக்கள் விடுதலை இராணுவ கடற்படையை நவீனமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும், இது ஏற்கனவே இரண்டு முழுமையாக செயல்படும் விமானம் தாங்கி கப்பல்களைக் கொண்டுள்ளது, சோவியத் காலத்தின் லியோனிங் மற்றும் உள்நாட்டில் கட்டப்பட்ட ஷான்டாங் ஆகியவை அதன் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டவை.