அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர்
அமெரிக்காவின் சமீபத்திய 'பரஸ்பர' வரி விதிப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் சீனா அதன் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது.
இதன் விளைவாக ஏற்படும் வர்த்தக பதற்றங்கள் தொழிற்சாலை மூடல்கள், பெரிய அளவிலான வேலை இழப்புகள் மற்றும் விரிவடையும் வர்த்தக பற்றாக்குறைகள் மூலம் இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கக்கூடும்.
தேசிய கட்டணக் கொள்கையை செயற்படுத்துதல், ஜி.எஸ்.பிளஸ் வரி சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்படுதல், இந்தியாவுடனான எக்டா போன்ற வர்த்தக ஒப்பந்தங்களை விரைவாகக் கண்காணித்தல் உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் செல்ல வேண்டும்.
அமெரிக்காவின் பரஸ்பர வரியும், அமெரிக்கா மீதான சீனாவின் பழிவாங்கும் வரியும் ஒரு வர்த்தகப் போரை ஆரம்பித்துள்ளன. இது உலகமயமாக்கலையும் அதை ஆதரிக்கும் உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகளையும் முடிவுக்குக் கொண்டுவருகிறது.
தற்போதைய உலக ஒழுங்கின் இந்த சீர்குலைவில், ஓரிரண்டு பொருட்களின் ஏற்றுமதிப் பொருளாதாரம் கொண்ட இலங்கை போன்ற சிறிய நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்படும். ஆனால் இந்த நாடுகளுக்கு அமெரிக்கா ஒரு பெரிய சந்தையாகக் காணப்படுகிறது.
பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் கூட வரிகள் முந்தைய நிலைக்குத் திரும்பாது. இது இலங்கையின் ஏற்றுமதியில் இடையூறு விளைவிக்கும்.