சாணக்கியனின் வீடியோவால் பிள்ளையான் கூட்டத்தில் பெரும் குழப்பம்


மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இன்றைய தினம் (25.07.2023) குழப்ப நிலை பதிவாகியிருந்தது.

மக்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்த போது வீடியோவொன்றை காட்சிப்படுத்த சாணக்கியன் அனுமதி கோரியுள்ளார்.

எனினும் அதற்கு அனுமதி வழங்கப்படாமையால் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் (பிள்ளையான்) இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது சந்திரகாந்தன், சாணக்கியனை “போடா” என தெரிவித்ததையடுத்து சாணக்கியன் ஆவேசமடைந்திருந்துள்ளார்.