போர்நிறுத்தத்தை மீறிய ஹமாஸ்: மீண்டும் போர் மூளும் சூழல்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே வெடித்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் போர் ஆரம்பித்துள்ளது.

இன்னும் 7 நாட்களுக்கு போர் நிறுத்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போரானது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

ஹமாஸ் போர்நிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

போர்நிறுத்தத்தை மீறிய ஹமாஸ்: மீண்டும் போர் மூளும் சூழல் | Israel Restarts War In Gaza

இந்த போர் நிறுத்த காலப்பகுதியில் ஹமாஸிடமிருந்து ஏராளமான பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் 30 பலஸ்தீனிய கைதிகளும் இஸ்ரேல் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.