ரணிலின் யாழ்ப்பாண விஜயம்! தமிழ் எம்.பிக்கள் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு, எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினது சங்க பிரதிநிதிகள் என 8 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க கோரியே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதால், அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படலாம் என எட்டு பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு யாழ்ப்பாணம் காவல்துறையினரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பில் அவர்களுடைய தரப்பு நிலைப்பாட்டினை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ முன்வைப்பதற்கு இன்றைய தினம்(3) அவகாசம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.