கனேடியர்களுக்கு அவசர அறிவித்தல்

அத்தியாவசிய தேவையின்றி இந்திய பயணத்தை கனேடியர்கள் தவிர்க்க வேண்டும்  கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.

தகுந்த பாதுகாப்புடன் இந்தியாவிற்கு, குறிப்பாக ஜம்மு-கஷ்மீர் போன்ற பதற்றம் மிக்க பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என தனது நாட்டு மக்களை கனடா அறிவுறுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலையில் இந்தியாவுக்கு தொடர்புள்ளதாக கனடா குற்றம்சாட்டியது. இதனால் இந்தியா, கனடா இடையே உறவு விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்திய தூதரக அதிகாரியை வெளியேற கனடா உத்தரவிட, அதற்கு பதிலடியாக கனடா தூதரக உயரதிகாரியை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையே, காலிஸ்தான் தலைவர் கொலையில் இந்தியா மீது கனடா அரசு குற்றம் சாட்டியதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கனடா அரசாங்கம் தனது மக்களுக்கான பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.