ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பஸ்கள் : 63 பேர் மாயம்


நேபாளத்தில், மதன்- ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த 2 பஸ்கள் நிலச்சரிவில் சிக்கி அருகில் உள்ள திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
 
இன்று (12) அதிகாலை 3.30 அளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
 
இதன்போது இரண்டு பஸ்களின்; சாரதிகள் உட்பட 63 பேர் பயணித்துள்ளனர்.
 
குறித்த இடத்தில் கடும் மழை பெய்து வருவதுடன், இந்த சம்பவத்தில் காணாமல் போன பஸ்களையும், பயணிகளையும் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.