வடக்கு - கிழக்கில் பௌத்த சின்னங்களாம்..!


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு இந்துக் கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், பௌத்த மர புரிமைகளை அழிப்பதற்கும் ஓர் எல்லை உண்டு. எனினும் நாம் பொறுமையு டன் செயற்படுகிறோம். எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இனங்களை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் நாடாளுமன்றத்தில் ஆற்றும் பொய்யான உரை வெட்கக்கேடானது. நாட்டுக்குள் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெற்றால் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையமுடியாது. 

வடுகங்கல பகுதியிலுள்ள சிவன் கோயிலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக தமிழ் அரசியல் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். புராதன பௌத்த தொல்பொருள் சின்னங்களைச் சிதைத்து சட்டத்துக்கு முரணாக சிவன் கோயிலை அமைக்கும் தரப்பினருக்கு எதிராக சிவனின் சாபம் திரும்புமே தவிர ஏனைய தரப்பினருக்கு அல்ல.

வடுகங்கல பகுதியில் பௌத்த சின்னங்கள் காணப்பட்டுள்ளமை தொல் பொருள் சான்றுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு இந்துக் கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளால்தான் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும்.

குருந்தூர்மலையில் பழமை வாய்ந்த பௌத்த மரபுரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பௌத்த வழிபாடுகளுக்கும் தமிழ் அரசியல் தரப்பினர் தடையேற்படுத்தியுள்ளார்கள்.

தேரவாத பௌத்த கொள்கையைப் பாதுகாக்கும் ஒரு நாடாக இலங்கையுள்ளது. ஆகவே பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்குமுண்டு.

இலங்கை சிங்கள - பௌத்த நாடு என்பதை எவராலும் மறுக்கமுடியாது. இல்லாத இனப்பிரச்சினையை தமிழ் அரசியல்வாதிகளே தோற்றுவிக்கிறார்கள்.

பௌத்த மரபுரிமைகளை அழிப்பதற்கும் ஓர் எல்லை உண்டு. பொறுமையுடன் செயற்படுகிறோம். கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சிங்கள மரபுரிமைகள் அழிக்கப்படுகின்ற நிலையில் சர்வதேச மட்டத்தில் சிங்களவர்களுக்கு எதிராகத் தவறான நிலைப்பாடு தோற்றுவிக்கப்படுகிறது.

தமிழினப் படுகொலைக்கு சிங்களவர்கள் பொறுப்புக்கூறவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கடனாவில் அண்மையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடாகும். தமிழ் மக்களைப்பாதுகாப்பதற்காகவே போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

போர் முடிவடைந்ததன் பின்னர் விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் எவ்வித இனப்படுகொலையும் இடம்பெறவில்லை என்பதை சர்வதேச நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

சிங்களவர்கள் இனப்படுகொலையாளிகள் என்று பறைசாற்றுவதை தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்-என்றார்.