அம்பாறையில் தோன்றிய புத்தர் சிலை, காணாமல் போன சூலம் : பின்னணியில் கடற்படையினரா?, புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய புலனாய்வு பிரிவினர்

தொன்மை வரலாறு கொண்ட உகந்தை முருகன் ஆலயம்  கடந்த சில நாட்களாக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.

 திடீரென அப்பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்படையினரால் ஸ்தாபிக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பான விவகாரமே இதற்கு காரணமாகும்.

இந்த விடயத்தை ஆராயும் விதமாக எமது ஊடகவியலாளர் உட்பட சக செயற்பாட்டாளர்கள் குழு அப்பகுதிக்கு சென்று குறித்த புத்த சிலை நிர்மாணம் குறித்து ஆராய்ந்துள்ளது.
 
முருகன் ஆலயத்திற்கு முன்பாக கடற்கரை பிரதேசத்தில் வலது புறம் வள்ளியம்மன் மலை  தோணிமலை போன்றவைகளும் இடது புறம் கடற்படை முகாமோடு இணைந்ததாகக் காணப்படுகின்ற ஒரு மலையும் காணப்படுவதோடு அந்த மலையில் தான் இந்த புத்தர் சிலையும் நிறுவப்பட்டு இருக்கிறது.

சைவத் தமிழர்களுடைய பூர்வீகமான   வரலாற்று இடத்தில் எவ்வாறு இந்த புத்தர் சிலை நிறுவப்பட்டது. யாரால் நிறுவப்பட்டது? ஏன் நிறுவப்பப்பட்டது? இதனுடைய பின்னணி என்ன? என்பதை எமது ஊடகவியலாளர்கள் ஆராய்ந்தனர்.

 இந்த புத்தர் சிலையானது கடற்படை முகாமில் இருந்து வந்த சிவில் உடையணிந்த  இருவரால்  நிறுவப்பட்டுள்ளது என தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த புத்தர் சிலையை அவர்கள் வழிபடுவதற்காக நிறுவியிருக்கலாம் என்றொரு கருத்தும் அங்கு கூறப்பட்டது.  
கடற்படையினர் வணங்குவதாக இருந்தால் அதை அவர்களது முகாமினுள் வைத்திருக்கலாமே ஏன் அதை பொது வெளியில் அதுவும் உகந்தை முருகன் திருவம்பாவை காலத்தில் தீர்த்தமாடுகின்ற அந்த பிரதேசத்தில் நிறுவினார்கள்  எனும் கேள்வியும் பிரதேச மக்களிடம் எழுகின்றது.

 உகந்தை முருகன் திருவெம்பாவை காலத்தில் தீர்த்தம் ஆடுகின்ற அந்த பிரதேசத்தில் இதற்கு முன்னர் ஒரு சூலம் நிறுவப்பட்டிருந்தது என்றும் இப்போது அந்த சூலம் அகற்றப்பட்டிருக்கிறது என்று ஊடகவிலாளர் குழுவால் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் களவிஜயம் மேற்கொண்டிருந்து ஊடகவியலாளர்களை, புலனாய்வு பிரிவினர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியதாக எமது ஊடவியலாளர் தெரிவித்தார்.

இதனால் குறித்த இடத்தில் ஒரு அச்சமான  பதட்டமான சூழல் நிலவியதாக எமது ஊடவியலாளர் குறிப்பிட்டார்.
 
 உகந்தைமுருகன் ஆயத்தின் மலையில் வள்ளியம்மன் ஆலயத்தை அண்மித்து அமைக்கப்படவிருந்த முருகன் சிலையினை அமைக்க வேண்டாம் என்று தடுத்து நிறுத்திய வன இலாகா மற்றும் ஏனைய திணைக்ககளங்கள்  இந்த புத்தர் சிலையினை மாத்திரம் வைப்பதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.  

இதேநேரம் இவ்விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்