நெருக்கடியால் திணறும் பிரித்தானியா..! திடீர் மின்வெட்டுக்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை

 

பிரித்தானிய குடும்பங்கள் இந்த குளிர்காலத்தில் ஒரே நேரத்தில் 3 மணிநேரம் வரை மின்சாரத்தை இழக்க நேரிடும் என்று தேசிய கிரிட் எச்சரித்துள்ளது.

இது ஒரு "சாத்தியமற்ற" சூழ்நிலை என்று கூறிய நிறுவனம், ஆனால் ஆற்றல் நெருக்கடி அதிகரித்தால் விநியோக குறுக்கீடுகள் சாத்தியமாகும் என்று எச்சரித்துள்ளது.

எந்த நேரங்களிலும் மின்வெட்டுக்கள் ஏற்படலாம் என்று வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது ஒரு "அடிப்படை பிரச்சனையாகவே" தேசிய கிரிட் எதிர்பார்க்கிறது. இதனால் பெரிதாக எந்த பிரச்சனையும் ஏற்படாது என தெரிவித்துள்ளது.

மின்வெட்டு தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நாள் முன்னதாகவே எச்சரிக்கப்படும்,

இது அதிக தேவை உள்ள நேரங்களில், காலை அல்லது மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைமுறைப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுள்ளது.