பிரித்தானிய பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிடவுள்ளதாக பொரிஸ் ஜோன்சன் அறிவிப்பு!

பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் விலகியதையடுத்து அப்பதவிக்கு மீண்டும் போட்டியிடவுள்ளதாக பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.முன்னாள் பிரதமரான அவர் கொவிட் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாகப் முறைப்பாடு வந்ததையடுத்து பதவி விலகியிருந்தார்.

இதனையடுத்து அவருடைய பொறுப்புக்கு லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.எனினும் அவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து விலகுவது குறித்து மன்னர் மூன்றாவது சார்ள்ஸூக்கு அறிவித்துள்ளதாக நேற்று கூறினார்.

இந்நிலையிலேயே பிரித்தானிய பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிடவுள்ளதாக பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.அதேநேரம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கும் பிரதமர் பதவிக்கான முன்வரிசைப் போட்டியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.