தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் அத்துமீறி விமானங்கள் குண்டுவீச்சு!

தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் 18 அணுசக்தி திறன் கொண்ட எச்-6 ரக குண்டுவீச்சு விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.தாய்வானின் பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, தாய்வானின் தென்மேற்கு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்கு அனுப்பப்பட்ட 21 மொத்த சீனப் போர் விமானங்களில், 18 குண்டுவீச்சு விமானங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையை கண்காணித்து வருவதாகவும், சீன விமானங்களை கண்காணிக்க அதன் போர் விமானங்கள் மற்றும் தரை அடிப்படையிலான ஏவுகணை அமைப்புகளைப் பயன்படுத்தியதாகவும் அமைச்சகம் மேலும் கூறியது.

கடந்த 2020ஆம் ஆண்டு சீனப் போர் விமான ஊடுருவல் குறித்த தினசரி தரவை வெளியிடத் தொடங்கியதில் இருந்து 24 மணி நேர காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான எச்-6 ரக குண்டுவீச்சு விமானங்கள் அத்துமீறியது இதுவே முதல்முறையாகும்.

சீனாவின் ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, 24 மில்லியன் மக்கள் வசிக்கும் ஜனநாயக ரீதியில் ஆளப்படும் தாய்வானை, அதன் பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக, சீன நிலப்பரப்புடன் தீவை இணைப்பதாகவும் அச்சுறுத்தி வருகின்றது