இந்தியாவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் : பதற்றத்தில் மக்கள்

இந்தியாவிலுள்ள  புது டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிகுண்டு விபத்தானது நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.

நடந்த வெடிவிபத்தின் பொது அதிஷ்டவசமாக தூதரக ஊழியர்கள் எவருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இஸ்ரேலிய தூதரக செய்தித் தொடர்பாளர் கைநிர்,’ இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகாமையில் மாலை 5.48 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்.

டெல்லி காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புக் குழுவினர் நிலைமையை இன்னும் ஆராய்ந்து வருகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.