தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை மற்றும் முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை என பல்வேறு சட்டமூலங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தடையை மீறி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இலங்கை மதிப்பில் 18 இலட்சம் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அரசின் இந்த புதிய சட்டங்களை மீறினால் அரசு அதிகாரிகளுக்கு 10 லட்சமும் மத தலைவர்களுக்கு 18 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.