ஆங் சான் சூகிக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இராணுவத்தால் ஆளப்படும் மியன்மாரில், நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தலைநகர் நெய்பிடாவில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தகவல் தடைசெய்யப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது மற்றும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.நோபல் பரிசு பெற்ற 76 வயதான ஆங் சான் சூகி மீது வாக்காளர் மோசடி உள்ளிட்ட குற்றவியல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.எனினும், அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுக்கிறார் மற்றும் உரிமைக் குழுக்கள் நீதிமன்ற விசாரணைகளை ஒரு போலித்தனமாக கண்டித்துள்ளன.சூகி இன்னும் 10 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சில மதிப்பீடுகளின்படி, அவர் 190 ஆண்டுகளுக்கும் மேலான மொத்த சிறைத்தண்டனையை எதிர்கொள்வார்.