கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி வந்த இ.போ.ச. பேருந்தை வவுனியாவில் வழிமறித்து சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் வவுனியாவில் நேற்று (18) வெள்ளிக்கிழமை மாலை 6.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேக நபர்களான இருவர் கொட்டன்கள், பொல்லுகளுடன் பேருந்தில் ஏறி சாரதி மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றனர்.
தாக்குதலில் காயமடைந்த சாரதி பேருந்தை பயணிகளுடன் வவுனியா காவல் நிலையம் கொண்டு சென்று முறையிட்டுள்ளார்.
அதன்பின்னர் சாரதி, வவுனியா வைத்தியசாலை சென்று அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் தனியார் பேருந்தில் பணியாற்றுபவர்கள் என்று தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.