கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் படுகொலை - குற்றவாளி பிரான்ஸில் கைது!



இலங்கையில் பல குற்றச்செயல்கள் செய்தமைக்காக தேடப்பட்டு வந்த பாதாள உலகக் குழுவின் தலைவரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான இரத்மலானே குடு அஞ்சு என அழைக்கப்படும் சிங்கராகே சமிந்த சில்வா பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளர்.

சர்வதேச காவல்துறையால் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி திரு.நிஹால் தல்துவா உறுதிப்படுத்தியுள்ளார்.

குடும்ப வன்முறை குற்றச்சாட்டின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, பிரான்ஸில் வசித்துவந்த குடு அஞ்சுவுக்கு எதிராக சர்வதேச காவல்துறைத் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையான, தெகிவளை மவுண்டலவேனியா மாநகரசபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வா படுகொலை உட்பட பல குற்றங்கள் தொடர்பில் குடு அஞ்சு தேடப்பட்டு வருகின்றார்.

இதன் காரணமாக, இவரை பிரான்சிலிருந்து இலங்கைக்கு கொண்டு வருவது குறித்து இலங்கை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.