இளையராஜாவை பார்த்தா எல்லாரும் நடுங்குவாங்க.. ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன காரணம்

இசைஞானி இளையராஜா ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்து தற்போதைய இளம் தலைமுறையினரும் ரசிக்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார்.

இளையராஜாவின் குழுவில் இசை கலைகுஞராக பணியாற்றி அதன் பின் ஏ.ஆர்.ரஹ்மான் மிகப்பெரிய இசையமைப்பாளராக மாறினார். ஆஸ்கார் வெல்லும் அளவுக்கு உயர்ந்து இருக்கும் ரஹ்மானுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இசை கலைஞன் என்றால் தண்ணி அடிப்பான், drugs அடிப்பான், பெண்களுடன் சுற்றி கொண்டிருப்பான் என ஒரு stigmaவை சிலர் உருவாக்கிவிட்டார்கள். இளையராஜா தான் அதை உடைத்தவர்.

அவர் சாமியார் போல தான் இருப்பார். தண்ணி அடிக்க மாட்டார், தம் அடிக்க மாட்டார், வேற கெட்ட பழக்கம் எதுவும் இருக்காது. அவரை பார்த்தாலே நடுங்குவாங்க.. அவரது கேரக்டர்-னால தான் நடுங்குவாங்க.

அவர் தான் எனக்கு inspiration என ரஹ்மான் கூறி இருக்கிறார்.