அதிஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த 18 வயது இளைஞன் - யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை - கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ். மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான அதிஉயர் அழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.