ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட காரைநகர் இலகடி பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த தக்சயன் என்ற 11 வயது சிறுவனே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.