தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பு!

தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், மிகப்பெரிய ஊழல் வழக்கில் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹைக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.69 வயதான முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹை, கடந்த 2018ஆம் ஆண்டு அதிகார துஷ்பிரயோகம் மற்றும் வற்புறுத்தலுக்கு தண்டனை பெற்றார்.இந்தநிலையில், புதிய ஆண்டிற்கான மூனின் சிறப்பு பொது மன்னிப்பின் பயனாளிகளில் ஒருவரான பார்க், அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக உள்ளூர் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.எனினும், மூன் முன்பு மன்னிப்பை நிராகரித்தார். ஆனால் பார்க்கின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.நாள்பட்ட தோள்பட்டை மற்றும் கீழ் முதுகுவலி காரணமாக இந்த ஆண்டு அவர் மூன்று முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேலும், 3,094 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. எதிர்வரும் 31ஆம் திகதி இவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என தென்கொரிய நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.பார்க்கின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில், அதிபரிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி சம்சங் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களிடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்று ஊழலில் ஈடுபட்டார். இந்த ஊழலில் அப்போதைய ஜனாதிபதி பார்க் கியுன் ஹைவுக்கு நேரடி பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.உத்தியோகபூர்வ அரசாங்கப் பாத்திரம் ஏதும் இல்லாவிட்டாலும் கொள்கை வகுப்பதில் தவறான செல்வாக்கை செலுத்திய அவரது 60 வயது ஆலோசகரான சோய் சூன்-சில் உடனான அவரது தொடர்புகளை மையமாகக் கொண்ட ஊழல் மற்றும் பியோங்சாங் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை கவுண்டியில் நடத்தியது தொடர்பான ஊழல் மோசடி இதில் அடங்கும்.தென் கொரியாவில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர் பார்க் கியுன் ஹை என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன், இதேவேளை, லஞ்சம் வாங்கியதற்காக 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த தென் கொரியாவின் முதல் பெண் பிரதமர் ஹான் மியோங்-சூக்கும் வெள்ளிக்கிழமை அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டார்.