ஈரானின் ஃபோர்டோ அணுஉற்பத்தி நிலையத்தை தகர்த்த “பங்கர் பஸ்டர்” வகை வெடிகுண்டுகளை பயன்படுத்துவது தொடர்பில் தனது இராணுவ ஆலோசகர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.
சுமார் 30,000 பவுண்டுகள் எடை கொண்ட Massive Ordnance Penetrator என்ற பெயரிலான "பங்கர் பஸ்டர்" வகை குண்டுகள் அமெரிக்க ஆயுதக் களஞ்சியத்தில் உள்ளன.ஆனால் இஸ்ரேலுக்கோ இந்த வகை குண்டுகளோ, அவற்றைப் பயன்படுத்த தேவையான பெரிய ரக விமானங்களோ இல்லை.
ஃபோர்டோ அணுஉற்பத்தி நிலையம் மிக ஆழத்தில், பாறை அமைப்புகளுக்குள் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இஸ்ரேலின் விமானத் தாக்குதல்களால் அதற்கு எந்த சேதத்தை ஏற்படுத்த முடியாது.
இந்த நிலையில், ஃபோர்டோ அணுஉற்பத்தி நிலையத்தை அழிக்க இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், இந்த MOP குண்டுகள் ஃபோர்டோவை அழிக்கக் கூடியவை என அமெரிக்க அதிகாரிகள் ட்ரம்பிடம் தெரிவித்துள்ள சூழலில் இஸ்ரேலுக்கு உதவுவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
ஈரானை தாக்கும் திட்டங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் தாக்குதல் நடத்த உத்தரவிடுவதற்கு முன்பு ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிடுமா என அவர் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாகச் சேர்ந்துகொள்கின்றதா என்பது குறித்து நெருக்கடியான சூழ்நிலை உருவாகியுள்ள பின்னணியில், தங்கள் பக்கம் நின்றதற்காக ட்ரம்பிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.
தாங்கள் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகவும் நேற்று இரவிலும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் மிகவும் நட்பான உரையாடல் நடந்தது எனவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இஸ்ரேல் தற்போது பல வலி தரும் இழப்புகளை சந்தித்து வருகிறது. எனினும், மக்கள் உறுதியுடன் இருக்கின்றனர் என அவர் தனது நாளாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.