அம்பிட்டிய சுமன ரதன தேரரின் இருப்பிடத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு! வெளியான தகவல்

அம்பிட்டிய சுமன ரதன தேரரின் இருப்பிடத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் இன்று அதிகாலையளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற வேளையில் அவர் அறைக்குள் இருந்ததாக கூறப்படுகிறது.

எனினும் இந்த சம்பவத்தில் சுமன ரதன தேரருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

சுமன ரதன தேரர், மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரை மற்றும் கெவிலியாமடு சுமன ரதன ஆகிய விகாரைகளின் விகாராதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.