இந்தியா முழுவதும் போர் ஒத்திகை : விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை


பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதி இந்தியா முழுவதும் போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அவசர சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

விமான தாக்குதல் நடைபெறும் போது ஒலிக்கும் அபாய ஒலி சைரனை ஒலிப்பது, முக்கிய தொழிற்சாலைகள் மற்றும் தளங்களை பாதுகாப்பது, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போர்க்காலத்தின் போது எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது உள்ளிட்ட போர்க்கால ஒத்திகைகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்  

மாநிலங்களில் மே 7ஆம் திகதி போர் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட வேண்டும். விமான தாக்குதல் தொடர்பான சைரன் ஒலி எழுப்புதல் சரியாக வேலை செய்கிறதா என சரி பார்க்க வேண்டும்.

போர் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் பொதுமக்கள், மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். மின்தடை நடைமுறைகள் தொடர்பாகவும், முக்கிய கேந்திரங்கள் பாதுகாப்பு தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

மீட்பு திட்டங்கள் தொடர்பான ஒத்திகை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் எல்லையை அண்மதித்து அமைந்துள்ள வட மாநிலங்களில் ஏற்கனவே, சில போர் ஒத்திகைகள் நடந்து வருகின்றன.

தற்போது மற்ற மாநிலங்களுக்கும் இத்தகைய அறிவிப்பை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

--