விமான சேவைகளை மார்ச் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க முடிவு!

விமான சேவைகளை மார்ச் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஏர் பபுள் முறையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.நாட்டில் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து வழக்கமான சேவைகளை இயக்க மத்திய போக்குவரத்து அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.இதன்படி இந்த வாரத்தில் மத்திய சுகாதாரத்துறை, விமான போக்குவரத்து அமைச்சகம், உள்துறை அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும், வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு முறைகள் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.