நடிகை மீனா குடும்பத்திற்கே கொரோனா

தமிழகத்தில் கடந்த சில  தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதன் மூன்றாவது அலையில் அரசியல் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் போன்ற பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வகையில் பிரபல நடிகை மீனாவுக்கு, அவரது  குடும்பத்தாருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அதிர்ச்சியான தகவலை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 2022 இல் எனது வீட்டுக்கு வந்த முதல் பார்வையாளர்ஆகின்றது.ஆனால் நான் அதை இருக்க விடப்போவதில்லை. மக்கள் எல்லலோரும் பாதுகாப்பாக  இருங்கள்.இந்த வைரஸை பரவவிடாதீர்கள். எங்களுக்காக பிராத்தனை செய்யுங்கள் என கூறியுள்ளார். மீனா மற்றும் அவரது குடும்பத்தார் விரைவில் குணம் அடைய வேண்டும் என ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர்.