கட்சி தாவியோரை நீக்க நடவடிக்கை - தமிழரசு அதிரடி


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினராக உள்ளபோதும் பிற கட்சிகளின் வேட்பு மனுவில் போட்டியிடும் 16 பேரை ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என விளக்கம்கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிரந்தர உறுப்பினராக இருந்துகொண்டு பிறகட்சிகளில் போட்டியிடும் உறுப்பினர்களிடமே முதற்கட்ட நடவடிக்கையாக விளக்கம் கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் இராமலிங்கம் இராகினி உட்பட 14 உறுப்பினர்களுக்கு எதிராகவே கட்சியின் செயலாளரால் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

14 நாள்களுக்குள் அவர்களிடமிருந்து விளக்கமும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.